விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கும் படம் வண்டி. புதுமுக இயக்குனர் ரஜீஷ் பாலா இயக்குகிறார். விதார்த், சாந்தினி, ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர்குமார், ஜான் விஜய், அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூரஜ் எஸ்.குரூப் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரஜீஷ் பாலா கூறியதாவது:
காணமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் கடைசியில் வேறொருவரின் சைக்கிளைத் திருடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு, அவன் வாழ்க்கையில் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை பை சைக்கிள் தீவ்ஸ் என்ற ஈரானிய படம் காட்டியது.
அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ் நாள் சேமிப்பு எல்லாத்தையும் எடுத்து ஒரு பைக்கை வாங்குகிறான். தான் ஆசைப்பட்ட பைக் வந்ததும் அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் போது, அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை பொல்லாதவன் படம் காட்டியது.
அதேபோல இந்த படத்தில் நவீன யமஹா பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது.
அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் அந்த பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பே வண்டி என்று வைத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.