ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
"அரசு தற்போது அறிவித்திருக்கும் 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கான மானியத்தொகை வழங்குதல், மற்றும் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசால் வழங்கும் மாநில அரசு விருதுகள் அறிவிப்பானது தமிழ் திரையுலகினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமிக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும், அரசு துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எங்களது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகவும், அனைத்து திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.