நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஆர்.பார்த்திபன், மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கவிருக்கும் 'கேணி' திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார்.
பார்த்திபன் உடன் நடிகை ஜெயப்பிரதா, நாசர், 'தலைவாசல்' விஜய் ஆகியோரும் முக்கியவேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கேரள மாநிலம் உருவான 1956 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடப்பதுபோல் 'கேணி' படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தையும், கேரளாவையும் தனித்தனி மாநிலமாக பிரிக்கும்போது, ஒரு கிணறு, ரெண்டு எல்லைக்கும் பொதுவான பகுதியில் அமைந்துவிடுகிறது. அந்த கிணறை சொந்தம் கொண்டாடும் இரண்டு எல்லைப்பகுதிகளின் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கேணி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
மலையாள இயக்குநராக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கேணி படத்தை இயக்கியுள்ளாராம் நிஷாத். அதனால்தான் இந்தப்படத்தில் நடிக்க பார்த்திபன் சம்மதம் தெரிவித்தாராம்.
கேணியைப் பற்றிய கதைபோல் தோன்றினாலும், உண்மையில் முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய படம் இது என்று கூறப்படுகிறது.