'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது. மேலும் அவரை இரண்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் பாவனா. இவர், பிப்., 17ல் காரில் சென்றபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார். இதில் பல்சர் சுனில் என்பவன் சிக்கினான். சுனிலை ஏவியது நடிகர் திலீப் தான் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், சுனில் இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார் என, திலீப் புகார் கொடுத்தார்.
அந்த புகார், பொய் என உறுதி செய்யப்பட்டு, திலீப்புக்கு எதிராக மாறியது. இதையடுத்து திலீப், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின், ஆலுவா கிளைச்சிறையில், 523ம் எண் கைதியாக அடைக்கப்பட்டார். அவருடன் மேலும் ஐந்து கைதிகள் உள்ளனர்.
இதனிடையே திலீப் ஜாமின் கேட்டு கொச்சியில் உள்ள அங்கமாலி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. விசாரணை, ஆரம்ப நிலையில் இருப்பதால் கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. அதோடு, திலீப்பை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். 2 நாள் அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.