தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். மிகக் குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டுமே 3 கோடிக்கு விற்கப்பட்டது. படமும் அதற்கு மேல் வசூலை அள்ளியது.
அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்து வெளிவந்த '10 எண்றதுக்குள்ள' படம் வெளிவந்து படுதோல்வியைத் தழுவியது. இருந்தாலும், விஜய் மில்டன் அடுத்து இயக்கிய 'கடுகு' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இப்போது 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை இன்று முதல் ஆரம்பித்திருக்கிறார். இப்படம் பற்றிய தகவலை விஜய் மில்டன் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய நண்பர், இயக்குனர் சுசீந்திரன் இன்று ஆரம்பமாகும் அப்படத்திற்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தி மூலம் இது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
'கோலி சோடா 2' படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிக்கிறார்களா அல்லது வேறு யாரும் நடிக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.