பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த சரித்திரப் படமான 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
2015ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் நாளில் வெளியான 'பாகுபலி' படம் தென்னிந்தியத் திரையுலகத்தில் புதிய வசூல் சாதனையைப் படைத்தது. இப்படியும் கூட பிரம்மாண்டமாக ஒரு சரித்திரப் படம் எடுக்க முடியுமா என்ற வியப்பை ஏற்படுத்திய இந்தப் படம் தெலுங்குத் திரையுலகில் பெரிய அளவில் வசூலைக் குவித்தது.
தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது.
பிரம்மாண்ட அரங்குகள், அசர வைத்த கிராபிக்ஸ் காட்சிகள், பரபரப்பான போர்க் காட்சிகள், காதல் காட்சிகள், என முதல் பாகத்தில் ரசிகர்களைக் கவரக் கூடிய பல விஷயங்கள் இருந்தன.
படத்தின் முடிவில் 'பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் ?' என்ற கேள்வியுடன் முதல் பாகம் முடிவடைந்தது. அதற்கு விடை காணும் விதத்தில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்து மிகப் பெரும் வசூல் சாதனையைப் படைத்தது.
இரண்டாம் பாகம் வசூலில் பெரிய சாதனையை ஏற்படுத்தினாலும், முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கமே இரண்டாம் பாகத்தின் பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.