ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
தமிழில் திகட்ட திகட்ட பேய்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெறுப்படைய செய்துவிட்டனர். பேய்ப்படங்கள் என்றாலே மக்கள் அலறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், டில்லி பாபு தயாரிப்பில், ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில், கடந்த மாதம் 16-ஆம் தேதி வெளியான 'மரகதநாணயம்' பேய்ப்படமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது.
மாறுபட்ட காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மரகத நாணயம் வெளியாகி 25 நாட்களாகியும் இன்னமும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆதி, நிக்கி கல்ராணி, ராமதாஸ், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறா இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன்.
இரண்டாவது படமாக வேறு ஒரு கதையை இயக்க திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.கே.சரவன். தன்னுடைய மூன்றாவது படமாக 'மரகதநாணயம்-2'வை இயக்க முடிவு செய்துள்ளார். இப்போது தனது இரண்டாவது படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.கே.சரவன் இன்னும் 3 மாதங்களில் புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார்.