ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியத் திரையுலகத்தில் இப்படி ஒரு கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் கொண்ட ஒரு படத்தை நாமும் பார்க்க முடியுமா என்ற ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம் 'நான் ஈ'. 5 வருடங்களுக்கு முன்பு 2012ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியானது.
'நான் ஈ' என்ற பெயரைக் கேட்டதும், ஒரு ஈயை வைத்து அப்படி என்ன ஒரு படத்தை எடுத்துவிட முடியும் என்ற சந்தேகத்துடன் கேட்டவர்களுக்கு மிரட்டலான ஒரு படத்தைக் கொடுத்து பதிலளித்தார் இயக்குனர் ராஜமௌலி. அதன் பின்தான் அவருடைய திறமை தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரவியது.
ஒரு ஈ, நாயகி சமந்தா, வில்லன் சுதீப் இந்த மூவரைச் சுற்றிய ஒரு கதையில் ஆக்ஷன், பரபரப்பு என அசத்தியிருந்தார் இயக்குனர் ராஜமௌலி. சுமார் 40 கோடி செலவில் தயாரான இந்தப் படம் 150 கோடி வரை வசூலித்தது. இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் அனுபவம் பின்னாளில் ராஜமௌலி 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை எடுக்க பெரிதும் உதவியது.
இந்தியத் திரையுலகில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்களில் 'நான் ஈ' படத்திற்கும் தனி இடம் உண்டு.