ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, நடிப்பில் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் மாநகரம். வசூல் ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாநகரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் கார்த்தி, அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் சார்பில் மறுத்துள்ளனர். அதாவது, திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருப்பதால், கார்த்தி நடிப்பது இன்னும் முடிவாகவில்லையாம். திரைக்கதை முடிவானவுடன் ஹீரோ என்பதை நாங்கள்தான் முடிவு செய்வேம் என்று தெரிவித்துள்ளனர்.
மௌனகுரு படத்தின் இயக்குநர் சாந்தகுமாரை பல வருடம் உட்கார வைத்ததால் கடைசியில் வெறுத்துப்போய் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட நிலைமை லோகேஷ் கனகராஜுக்கு வராமல் இருக்கணும் என்று கமெண்ட் அடிக்கின்றனர் சக தயாரிப்பாளர்கள்.