டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மதயானைக்கூட்டம், கிருமி, என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்தவர் கதிர். தற்போது விக்ரம் வேதா, சத்ரு, பரியேறும் பெருமாள், சிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய் சேதுபதி என்ற இரண்டு முன்னணி நடிகர்கள் இருக்க, கதிரும் மூன்றாவது ஹீரோ போன்று ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்திருக்கிறார்.
இந்த அனுபவம் குறித்து கதிர் கூறும்போது, விக்ரம் வேதா படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, ஹீரோவாக நடித்து வரும் நேரத்தில் கேரக்டரில் நடித்தால் வளர்ச்சியை பாதிக்குமோ என்று தயங்கினேன். ஆனால், விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்த படத்தில் நீயும் ஒரு ஹீரோதான் என்று சொன்னார். அதன்பிறகு தான் ஒரு தைரியம் வந்து நடிக்க ஒத்துக்கொண்டேன்.
மேலும், இப்படத்தில் வரலட்சுமி எனக்கு ஜோடி என்றபோது மனதளவில் அடுத்த பயம் வந்து விட்டது. தாரைத் தப்பட்டை படத்தில் அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போயிருந்தேன். அதனால், படப்பிடிப்பு தளத்துக்கு அவர் வந்தபோது பேசாமலேயே இருந்தேன். ஆனால் வரலட்சுமி என்னுடன் சகஜமாக பேசினார். அதன்பிறகுதான் அவர் மீதிருந்து பயம் படிப்படியாக குறைந்தது என்று கூறும் கதிர், இப்போது வரலட்சுமி எனக்கு நல்லதொரு தோழியாகி விட்டார் என்கிறார்.