வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
'எந்திரன்-2' படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், அதன் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. 2.0 படத்தின் படப்பிடிப்பை முடித்த ரஜினி, சில வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, பா.ரஞ்சித் இயக்கத்தில் 'காலா' படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது. சில நாட்கள் ரஜினியை வைத்து படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் மீண்டும் காலா படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டார். தற்போது அதை முடித்துவிட்டு அமெரிக்கா கிளம்பி விட்டார்.
ரஜினி நடிப்பில் '2.0' மற்றும் 'காலா' என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருவதால், இரண்டு படங்களில் எந்த படம் முதலில் வெளியாகும் என்ற ஒரு குழப்பம் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த கேள்விக்கு தற்போது விடை தெரிய வந்திருக்கிறது.
'2.0' படத்திற்கு முன்னதாகவே 'காலா' படத்தை வெளியிட முடுவு செய்துள்ளனர். ரஜினியின் '2.0' முதலில் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் திட்டமிட்டபடி முடிய வாய்ப்பில்லை எனவே '2.0'வின் ரிலீஸை 2018, ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தார்கள்.
ஆனால் அன்றும் '2.0' படம் வெளியாகவில்லை என்றும், தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக காலாவை, 2.0க்கு முன்னதாக இந்த வருட தீபாவாளிக்கு வெளியிட எண்ணியிருப்பதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.