தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் நல்லவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் நல்லவர்களாகவே இருப்பார்கள், கெட்டவர்களாக நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் கெட்டவர்களாகவே இருப்பார்கள் என்பது அந்தக் கால மக்களின் எண்ணமாக இருந்தது. வில்லன் நடிகர்களில் எந்த ஒரு கெட்டப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாத நடிகர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார்களோ இல்லையோ நிஜ வாழ்வில் ஹீரோவாக இருக்கிறார்கள்.
இந்தியத் திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜ், தெலுங்கானா மாநிலத்தில் மெகபூப் நகர் மாவட்டத்தில் கொண்டரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தை தத்தெடுத்து அந்தக் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார். அந்தக் கிராமத்திற்காக பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.
ரம்ஜான் தினத்தன்று ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து அதை அன்பளிப்பாகவும் வழங்கியிருக்கிறார். சோட்டே மியான் என்பவர் மனைவி மூன்று மகள்களுடன் இடிந்த ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்திற்காக புதிய வீட்டை பிரகாஷ்ராஜ் அவருடைய அறக்கட்டளை மூலம் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த நிகழ்வில் கிராமத்து மக்களும் கலந்து கொண்டனர்.
“வாழ்க்கையை மீண்டும் திருப்பிக் கொடுத்த மகிழ்ச்சி” என்று இது பற்றி பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.