மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ரஜினி ரசிகர்களை சந்தித்ததிலிருந்து அவரைப்பற்றிய செய்திகள் அதிகம் வெளி வருகின்றன. அதிலும் அவர் அரசியல் குறித்து பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் தான் அரசியலுக்கு வருவேன் என்று இன்னும் ஆணித்தரமாக ரஜினி கூறவில்லை. தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மும்பையில் நடந்து வரும் காலா படத்தில் பிஸியாக உள்ளார் ரஜினி.
இந்நிலையில் விஐபி-2 படம் இசை வெளியீடு தொடர்பாக மும்பை சென்றிருந்த சவுந்தர்யாவிடம், ரஜினி அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சவுந்தர்யா, அப்பா மனதில் பட்டதை செய்ய கூடியவர், அவர் எதை செய்தாலும் சரியாக தான் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஆதரவு அளிப்போம், அவரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார்.