'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. முதல் படமே அவருக்கு ஹிட்டாக அமைந்தது. என்றாலும் அதன்பிறகு நடித்த யாகவராயினும் நா காக்க, கோ-2, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் தோல்வியடைந்து அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தன. இந்தநிலையில், ஆதியுடன் அவர் நடித்து சமீபத்தில் வெளியான மரகத நாணயம் வெற்றி பெற்று தற்போது தமிழ் சினிமா மீது நிக்கி கல்ராணிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
மேலும், இந்த படத்தைத் தொடர்ந்து நெருப்புடா, கீ, ஹரஹர மகாதேவகி, பக்கா என நான்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருவதாக சொல்கிறார். அதோடு, இப்போது நான் நடித்து வரும் படங்கள் அனைத்துமே நல்ல கதைகளில் உருவாகி வருவதால் அடுத்தடுத்து எனக்கு ஹிட் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதன்காரணமாக, இதுவரை ஹோட்டல்களில் தங்கியபடியே தமிழ்ப்படங்களில் நடித்து வந்த நான் இப்போது சென்னையில் புதிய வீடு வாங்கி குடியேறி விட் டேன் என்கிறார் நிக்கி கல்ராணி.