'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பிவிஆர் சினிமா சென்னை விமான நிலையம் அருகில் பிவிஆர் சினிபிளெக்ஸ் என்ற தியேட்டர் வளாகத்தை திறந்துள்ளது. இதில் 5 திரையரங்குகள் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து படம் பார்க்கலாம். இதனை தொடங்கி வைத்து நடிகர் அர்ஜுன் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளேன். இந்த திரையரங்குகளில் ஒளி, ஒலி நுட்பத்தை கண்டு வியப்படைந்தேன். புதிய திரையரங்கங்கள் தொடங்குவது சினிமாவின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்து, திருட்டு சிடி மற்றும் சினிமாவை அழிக்க நினைக்கும் வேறு சில சக்திகளையும் கட்டுப்படுத்த பெருமளவு உதவும்.
இதற்காக திரையரங்குள் பெருக வேண்டும். எங்களது நிபுணன் வரும் ஜூலை 7 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது . பெரும் உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடு செய்து எடுத்துள்ள இப்படத்தை மக்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் அர்ஜுன்.
விழாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் அருண் வைத்தியநாதன், பிவிஆர் சினிமாவின் தென்னிந்திய பொது மேலாளர் ராஜிந்தர் சிங், மார்க்கெட்டிங் தலைவர் மீனா சாபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.