ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வக்கிலாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளாக அறியப்பட்டவர் ஜெரோம் புஷ்பராஜ். தற்போது அவர் மகன் நடிப்பில் யானும் தீயவன் படத்தை தயாரித்துள்ளார். பிரசாந்த் ஜி.சேகர் இயக்கி உள்ளார். சதுரன் படத்தில் நடித்த வர்ஷா ஹீரோயின். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் முதன் முறையாக வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர பொன்வண்ணன், சந்தான பாரதி, விடிவி.கணேஷ், அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார், ஸ்ரேயாஷ் கிருஷ்ணா இசை அமைத்துள்ளார். படம் வருகிற 30ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் பிரசாந்த் ஜி.சேகர் கூறியதாவது:
வீட்டை விட்டு ஓடும் காதலர்கள் நண்பன் வீட்டில் தஞ்சமடைகிறார்கள். அது நகருக்கு ஒதுக்குபுறமான பகுதி. கூலிக்காக கொலை செய்யும் தாதா ஒருவன் அங்குதான் தலைமறைவாக இருக்கிறான். அங்கு அவன் செய்யும் கொலை ஒன்றை ஹீரோயின் பார்த்து விடுகிறாள். விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக தாதா, காதலர்களை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போடுகிறான். அதிலிருந்து காதலர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் கதை. என் நண்பன் ஒருவன் காதலியுடன் தாதா கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை சொன்னான். அதன் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் வில்லனாக நடித்திருக்கும் ராஜு சுந்தரம் மாஸ்டருக்கும் இருக்கும், ஹீரோவுக்குகூட ஓப்பனிங் சாங் கிடையாது. வில்லனுக்கு உண்டு. சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் படமாகி உள்ளது. எல்லோரும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. என்கிறார் பிரசாந்த் ஜி.சேகர்.