தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா நட்சத்திர ஜோடியின் மூத்த மகளான ஷிவானி ராஜசேகர், தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமாக உள்ளார் என கடந்த சில நாட்களாக அவர்கள் தரப்பிலேயே மீடியாக்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டன. ஆனால், எந்தப் படத்தில் அவர் அறிமுகமாக உள்ளார் என்ற தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, 'தொடரி' படத் தோல்விக்குப் பிறகு பிரபு சாலமன் அடுத்து இயக்க உள்ள 'கும்கி 2' படத்தில் தான் ஷிவானி நாயகியாக அறிமுகமாக உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கயல், தொடரி' என அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்ததால் தன்னுடைய அடுத்தபடம் பற்றி மிகவும் கவனமாக இருக்கிறாராம் பிரபு சாலமன்.
'மைனா, கும்கி' போன்ற வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். இரண்டு படங்களுமே மலை சார்ந்த கதையாக இருந்ததால் மீண்டும் அது போலவே ஒரு கதையை எழுத முடிவெடுத்தாராம். கடைசியில் 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தையே உருவாக்கினால் என்ன என்று கதையை எழுதி முடித்துவிட்டார் என்கிறார்கள்.
'கும்கி' படத்திற்குப் பிறகு சரியான வெற்றியைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பாரா அல்லது வேறு யாராவது நடிப்பார்களா என்பது விரைவில் தெரியவரும்.