'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டதால், அவர் நடித்து வந்த சபாஷ் நாயுடு படத்தின் பணிகள் முடங்கிப்போனது. சபாஷ் நாயுடு படத்தை முடித்து வெளியிட தற்போது வாய்ப்பு இல்லை என்பதால், அதற்கு முன்னதாக 'விஸ்வரூபம்-2' படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் கமல்.
'விஸ்வரூபம்' முதல் பாகம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பொறுப்பை ஆஸ்கார் ரவிக்கு வழங்கினார், ஆனால், பண விஷயத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளால் பட வேலைகள் தடைப்பட்டிருந்தன. இப்போது அந்த பிரச்சனைகளை தீர்த்து 'விஸ்வரூபம்-2' படத்தை மிக விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் இப்போது அதன் பணிகளில் பிசியாக இயங்கி வருகிறார்!
இந்நிலையில் நேற்று முதல் விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் வருகிற ரம்ஜான் திருநாளில் வெளியாகிறது என செய்திகள் வந்தன. ஆனால் இதை கமல் மறுத்துள்ளார். விஸ்வரூபம்-2 டிரைலர் குறித்து கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
"விஸ்வரூபம்-2 டிரலைர் தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தி தவறானவை. அதற்கான பணிகள் நடந்து வருகிறது, விரைவில் வெளியாகும். ஹிந்தி உரிமையும் எங்களிடம் தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.
விஸ்வரூபம்-2 படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என கமல் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.