ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமுத்திரக்கனியை பொறுத்தவரை தமிழ்சினிமா ரசிகர்கள் அவரை திரையிலும் நேர்மையான நடிகராகவே பார்க்க விரும்புகிறார்கள். ரஜினி முருகன், பாயும்புலி போன்ற படங்களில் அவர் வில்லனாக நடித்ததை பெரும்பாலான ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இயக்குனர் பாலா கூட சில வாரங்களுக்கு முன்பு சமுத்திரக்கனியின் 'தொண்டன்' பட விழாவில் பேசும்போது, “சமுத்திரக்கனி தேவையில்லாம ரெண்டு படத்துல வில்லனா நடிச்சு தப்பு பண்ணிட்டான்” என குறிப்பிட்டு பேசினார்.
சமுத்திரக்கனியும் இனி வில்லனாக நடிப்பதில்லை என்கிற முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் அடுத்ததாக தமிழில் உதயநிதியை வைத்து இயக்கும் படத்தில் சமுத்திரக்கனி தான் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
மலையாளத்தில் ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தைத்தான் இயக்குனர் பிரியதர்ஷன் தமிழில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் வில்லனாக ஜிம்சன் என்கிற கேரக்டரில் சுஜித் சங்கர் என்கிற புதுமுக நடிகர் நடித்திருந்தார். மிகப்பிரமாதமான நடிப்பால் தற்போது அவருக்கு அதிக படங்கள் கிடைத்து வருகின்றன. அந்த கேரக்டரில் தான் சமுத்திரக்கனியை நடிக்க வைக்க இருக்கிறாராம் பிரியதர்ஷன்.
ஏற்கனவே கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் தான் இயக்கிய 'ஒப்பம்' படத்திலும் சமுத்திரக்கனியை ஒரு சைக்கோ வில்லனாக நடிக்க வைத்திருந்தார் பிரியதர்ஷன். அந்தப்படத்தைப்போல இதில் அவ்வளவு பயங்கரமான வில்லன் இல்லை என்றாலும் கூட அனைவரும் ரசிக்கத்தக்க வில்லன் கதாபாத்திரமாக இது இருக்கும் என்பது மட்டும் உண்மை.