பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை விதிக்கக் காரணமாக இருந்த பீட்டா அமைப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருந்த நடிகர், நடிகைகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. த்ரிஷா உள்ளிட்ட சிலர் பீட்டாவிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தனர். ஆனாலும், இன்னமும் சிலர் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதோடு அவர்களின் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கத்தி படத் தயாரிப்பின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தயாரிப்பு நிறுவனம் என லைக்கா நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுந்தது. அந்த நிறுவனம் சார்பாக இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு விழாவிற்கு ரஜினிகாந்த் செல்ல உள்ளார் என்ற அறிவிப்பு வந்ததும் ரஜினிக்கு எதிராகவும் குரல் எழுந்தது. அந்த நிறுவனம் தற்போது ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்க ஷங்கர் தயாரிப்பில் 400 கோடி ரூபாய் செலவில் 2.0 படத்தைத் தயாரித்து வருகிறது.
2.0 படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தொடர்ந்து பீட்டாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், 2.0 பட வெளியீட்டின் போது மேலும் பிரச்சனைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.