மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு பெரும் நடிகர்களுக்கு மத்தியிலும் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, ராமராஜன், மோகன் என அடுத்த கட்ட நடிகர்களும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்கள். ஆனால், அது போன்ற ஒரு நிலை இந்த 2017ல் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குமான வியாபாரமும், வரவேற்பும், வசூலும் தனியாக உள்ள நிலையில் அவர்களுக்கு இணையாக விஜய், அஜித் போன்றோர் உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால், அடுத்த கட்டங்களில் உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியான வெற்றியும், வரவேற்பும் இல்லாமல் இருக்கிறது.
விக்ரம், சூர்யா ஆகியோர் கூட கடுமையான போட்டிகளைச் சந்திக்க வேண்டிய சூழலே உள்ளது. விஷால், ஆர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் அடுத்த நிலையில் வாரிசு நடிகர்களான விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், அதர்வா போன்றோர் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் பெரிய வெற்றி என்ற ஒரு நிலை வரவேயில்லை என்பதே உண்மை.
விக்ரம் பிரபு அறிமுகமான 'கும்கி' படம் தவிர அடுத்து அவர் நடித்து வெளிவந்த ''இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம், வாகா, வீர சிவாஜி” ஆகிய படங்கள் தோல்விப் படங்கள்தான். அதிலும் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களுமே மூன்று நாட்கள் கூட ஓடாத படு தோல்விப் படங்கள். விக்ரம் பிரபு, அதிகம் எதிர்பார்த்து வெற்றிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் 'சத்ரியன்' படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது.
விக்ரம் பிரபு போலவே மற்றொரு வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த “கடல், என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம்” ஆகிய அனைத்துப் படங்களுமே தோல்விப் படங்கள்தான். கௌதம் நாயகனாக நடிக்க மிகவும் தாமதமாகத் தயாராகி வந்த 'ரங்கூன்' படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது.
பிரபுவின் வாரிசான விக்ரம் பிரபு, கார்த்திக்கின் வாரிசுன கௌதம் கார்த்திக் இருவருக்கும் அடுத்த பரீட்சை 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து அவர்கள் நடித்து வெளிவர உள்ள படங்கள் அடுத்த படிக்கட்டில் ஏறும்.