தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சரவணன் இருக்க பயமேன்' என்கிற படத்தை பார்த்தால் உதயநிதி இன்னும் காமெடி என்கிற ஒரு பாதுகாப்பான வட்டத்தை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கிறார் என்பது புரிந்தது. அடுத்ததாக தூங்கா நகரம் 'கௌரவ் நாராயணன்' இயக்கத்தில் 'இப்படை வெல்லும்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். கெத்து' படத்தை தொடர்ந்து இதிலும் ஆக்சன் ஏரியாவில் கொஞ்சம் போல கால் வைத்திருப்பதாகவே தெரிகிறது.
இருந்தாலும் உதயநிதியை ஒரு நடிகராக அடுத்தகட்டத்திற்கு செல்ல இந்தப்படங்கள் எந்த அளவு உதவி செய்யும் என சந்தேகமாக பார்த்த வேளையில் தான் திடீரென பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிப்பதாக அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அதேசமயம் கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தைதான் உதயநிதிக்காக பிரியதர்ஷன் ரீமேக் செய்ய இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
காரணம் தற்போது உதயநிதியின் இந்தப்படத்தை தயாரிக்கும் சந்தோஷ் நாயர் தான் இதன் ஒரிஜினலான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் இணை தயாரிப்பாளர் என்பது கவனிக்கத்தக்கது. உதயநிதி ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார் மலையாள நடிகை நமீதா பிரமோத். யாவர் அபர்ணா வினோத் கேரக்டரிலும், படத்தின் இன்னொரு முக்கியமான அலான்சியர் லே கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரும் நடிக்க இருக்கிறார்கள். பஹத் பாசிலின் கேரக்டரில் உதயநிதி நடிப்பதும், அதிலும் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிப்பதும் நிச்சயம் உதயநிதியை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.