டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசை அமைப்பாளர் பரணி இயக்கி, இசை அமைத்திருக்கும் படம் ஒண்டிக்கட்ட. நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரித்திருக்கிறார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், தினா, சத்யா, அம்ரீஷ் கலந்து கொண்டனர். விழாவில் எஸ்.ஏ.ராஜ்குமார் பேசியதாவது:
இந்த படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. தனது சொந்தப் படம் என்பதற்காக அல்ல, பரணி எப்போது இசை அமைத்தாலும் அதில் மெலடி தூக்கலாக இருக்கும். மெலடி பாடல்கள்தான் காலத்தை வென்று நிற்கும். ஆனால் இன்றைக்கு புதிய டிரண்ட் என்று சொல்கிறார்கள். இசையை பொறுத்தவரையில் டிரண்ட் என்பதே கிடையாது. இசை என்றைக்கும் இசைதான். டிரண்ட் என்று சொல்லி பாடல்களை குப்பையாக தருகிறார்கள். என் வாயில் கெட்ட வார்த்தை வருகிறது. சபை நாகரீகம் கருதி பேசவில்லை.
இவர்களாக வெறும் சத்தங்களால் ஒரு பாடலை உருவாக்கி விட்டு அதையே டிரண்ட் என்கிறார்கள். ஒரு இசை அமைப்பாளரின் திறமை மெலடி பாடல்களில்தான் தெரியும். இளையராஜா போன்றவர்கள் இப்போதும் தங்கள் தரம் குறையாமல் இசை தருவதற்கு காரணம் அவர்கள் டிரண்டை நம்புவதில்லை. இசையை நம்புகிறார்கள். இசை என்பது வெறும் சத்தங்களால் உருவாவதல்ல. கதை, கதைக்கான சூழல், இயல்பு, கதாபாத்திரங்களின் தன்மை இவற்றால் உருவாவது. இவற்றில் பணியாற்றுவதால் ஒவ்வொரு இசை அமைப்பாளருக்குள்ளும் ஒரு இயக்குனர் இருக்கிறார். பரணி அதனை இப்போது வெளிக் கொண்டு வந்திருக்கிறார் என்றார் எஸ்.ஏ.ராஜ்குமார்.