தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல நாட்டு வீரர்களும் வருகை தந்திருந்தனர். அதேப்போல, இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்கிற ஆவலில் வந்திருந்த நமக்கு பரிட்சயமான சினிமா பிரபலங்கள் இருவர். ஒருவர் தனுஷ்.. இன்னொருவர் பிருத்விராஜ்.. இவர்கள் இருவரும் தங்களது ஆஸ்தான வீரரான சச்சினை இந்தபோட்டியின்போது ஸ்டேடியத்தில் சந்தித்து மகிழ்ந்தனர்.
தனுஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணவந்த தனுஷூக்கு, மழையால் ஆட்டம் தடைபட்ட நேரத்தில் சச்சினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேப்போல பிருத்விராஜ் மலையாளத்தில் நடித்துவரும் 'ஆடம் ஜான்' படத்தின் படப்பிடிப்பும் லண்டனில் நடைபெற்று சமீபத்தில் தான் முடிவடைந்தது. ஊருக்கு திரும்புவதற்கு முன் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்டை நேரில் பார்க்க வந்த பிருத்விராஜுக்கும் சச்சினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனுஷ், பிருத்விராஜ் இருவருமே சச்சினை சந்தித்ததை பெருமையுடன் தங்களது வலைப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.