விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
விதார்த், டப்பிங் ஆர்ட்டிஸ் ரவீனா ரவி நடித்துள்ள படம் ஒரு கிடாயின் கருணை மனு. சுரேஷ் சங்கய்யா இயக்கி உள்ளர், ஆர்.ரகுராம் இசை அமைத்துள்ளார், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
காணாமல் போன தனது செல்ல ஆட்டுக்குட்டியை தேடிச் செல்லும் ஒருவனின் கதை. காணாமல் போன ஆடு இன்னொருவரால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. கோவிலில் பலியாவதிலிருந்து ஆடு எப்படி காப்பாற்றப்படுகிறது என்கிற பதை. படம் தயாராகி ஒரு வருடத்துக்கு மேலாகிறது.
இதுவரை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருகளை பெற்றுள்ளது. தணிக்கை குழுவிடம் மாட்டி பிறகு மறு தணிக்கை செய்யப்பட்டு படம் வெளிவந்தது. பலமுறை தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வந்த இந்தப் படம் வருகிற ஜூன் 2ந் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படத்துக்கு கிடைத்த மரியாதை அளவுக்குள் அடங்காதது. கோடை விடுமுறையில் குழந்தைகள் மட்டுமின்றி , பெரியவர்களும் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பர். கிராமிய பின்னணியில் இருந்து வந்து தற்போது நகரத்தில் வாழ்வோருக்கு தங்களுடைய கிராமிய நினைவுகளை பசுமையாக மீண்டும் நெஞ்சில் பூக்க வைக்கும் "ஒரு கிடாயின் கருணை மனு" என்கிறார் ஈரோஸ் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அதிகாரி சாகர் சத்வானி.