சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ரஜினி எடுக்கும் எந்த முடிவும் சரியாகத்தான் இருக்கும் என்கிறார் நடிகரும், அவரது மருமகனுமான தனுஷ். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டார். அப்போது ரசிகர்களிடத்தில் பேசிய ரஜினி, நான் என்னவாக வேண்டும் என்பதை ஆண்டவன் தான் தீர்மானிக்க வேண்டும், அரசியலில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு இப்போதே விலகிவிடுங்கள், போர் வரும் போது பார்த்து கொள்ளலாம், போருக்கு தயாராகுங்கள்... என்று தனது அரசியல் பற்றி பல்வேறு விஷயங்களை பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பலரும் ரஜினியை விமர்சித்தும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் தனுஷிடம், ரஜினியை பற்றி ஏதாவது சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் உங்களது குடும்பத்திற்கு ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்கு பதிலளித்த தனுஷ், ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதனால் எங்களது குடும்பத்தில் எந்த அழுத்தமும் இல்லை என்றார்.