'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள படம் சரவணன் இருக்க பயமேன். எழில் இயக்கத்தில் உதயநிதி, ரெஜினா, சூரி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மே 12-ந்தேதி வெளியான இந்த படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
நான் நடித்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி பெரிய ஹிட்டாக அமைந்தது. அதன்பிறகு கதிர்வேலனின் காதல் ஒரு டீசன்டான வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு நான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் நான் தப்பான படங்களில் நடிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். அதையடுத்து கமர்சியல் கதையில் பி அண்ட் சி வரை ரீச்சாகும் ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போதுதான் டைரக்டர் எழில், சரவணன் இருக்க பயமேன் கதையை சொன்னார். எதிர்பார்த்தபடியே இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. அதற்குள் அவர் அடுத்த படத்துக்கான கதையை ரெடி பண்ணி விட்டார். ஒரு ரெண்டு மூன்று படம் பண்ணிவிட்டு வருவதாக சொல்லியிருக்கிறேன்.
மேலும், பாகுபலி-2 ஒரு சுனாமி மாதிரி அடிச்சிட்டு போய்விட்டது. அந்த படம் வெளியாகியிருந்த நேரத்தில் என் படத்தை வெளியிடலாமா? வேண்டாமா? தியேட்டர்கள் கிடைக்குமா? என்றொரு டவுட் இருந்தது. ஆனால் விநியோகஸ்தர்கள் நம்பிக்கை கொடுத்தனர். அதனால் தைரியமாக படத்தை வெளியிட்டோம். எனது முதல் படமான ஓகே ஓகே படத்தில் வேணாம் மச்சான் வேணாம் பாடல் எப்படி ஹிட்டாக அமைந்ததோ, அதேப்போல் இந்த படத்தில் டி.இமான் இசையில் உருவான லாலா கடை சாந்தி, எம்புட்டு இருக்கு ஆசை என்ற இரண்டு பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்தன. மூன்றாவது வாரமும் 80 திரைகளில் சரவணன் இருக்க பயமேன் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்.