அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. தற்போது புஷ்பா புருசனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு, சந்தானம் ஹீரோவாகி விட்டதால், சிம்பு, ஜீவா, சிவகார்த்திகேயன், உதயநிதி உள்ளிட்ட பல நடிகர்களுடன் படம் முழுக்க வரும் காமெடியனாகி விட்டார். தான் நடிக்கும் காமெடி காட்சிகள் ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெடும் சூரி, தன்னுடன் நடிக்கும் ஹீரோக்கள் தனக்கு இடைவெளி கொடுத்து நடிப்பதாகவும் சொல்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், நான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் நடித்த படங்களென்றாலும் நான் எனது மகளிடம்தான் கருத்து கேட்பேன். அவள் அந்த படங்களின் காமெடி காட்சிகளை முதலில் இருந்து கடைசி வரை மளமளவென்று சொல்லி விட்டாலே அந்த படம் ஹிட் என்று முடிவு செய்து விடலாம். காரணம், குழந்தைகளை படம் கவரும்போது தான் அதை மனதில் வைத்துக்கொண்டு சொல்வார்கள். அப்படி குழந்தைகளை கவர்ந்து விட்டால் அந்த படங்கள் கண்டிப்பாக பெரியோர்களையும் கவர்ந்து விடும். அதனால் என்னைப்பொறுத்தவரை எனது படங்கள் பற்றி மற்றவர்களிடம் கருத்து கேட்பதை விட என் மகளிடம்தான் கேட்பேன். அவள் சொல்லும் பதிலை வைத்தே படம் வெற்றியா? இல்லையா? என்பதை முடிவு செய்து கொள்வேன் என்கிறார் சூரி.