ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடித்துள்ள சங்கலி புங்கிலி கதவ தொற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. இந்த படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சூரி தனது படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் படப்பிடிப்பு முழுவதும் பழனியில் 50 நாட்கள் நடந்தது. இந்த 50 நாளும் விதமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது. வாழை இலையை மட்டும் உடுத்திக் கொண்டு நான் ஓட வேண்டும், இரண்டு நாய்கள் என்னை துரத்துவது போன்ற காட்சி. ஆனால் டேக் போனபோது 4 நாய்கள் துரத்தியது. சினிமா நாயுடன் தெரு நாய்களும் சேர்ந்து விரட்டியது. கிளைமாக்ஸ் காட்சியில் மாடியில் தொங்கிக் கொண்டு நடித்தபோது கீழே விழுந்து கட்டை காலை கிழித்து ரத்தம் கொட்டியது. அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தேன்.
நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் அறை எனக்கு சவுகரியமாக இல்லை. அதனால் வேறு அறை ஏற்பாடு செய்யுமாறு உதவியாளரிடம் கூறிவிட்டு படப்பிடிப்புக்கு சென்று விட்டேன். படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவில் ஓட்டலுக்கு திரும்பினேன். காலையில் அறையை மாற்றச் சொன்னதை மறந்து விட்டு பழைய அறையை திறந்து கொண்டு உள்ளே போய்விட்டேன். அங்கு பெண்கள் நிறைய பேர் படுத்திருந்தார்கள். ஆத்தாடி... என்ன இது வம்பா போச்சுன்னு அப்படியே யூடேர்ன் அடித்து திரும்பினேன். உதவியாளர்களை அழைத்து ஏண்டா ரூமை மாற்றிய விபரத்தை சொல்லவில்லை என்று திட்டிக் கொண்டிருந்தபோது அந்த ரூமிலிருந்து ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து விட்டார்கள். நான் அவர்களிடம் மன்னிச்சிடுங்க தெரியாம நடந்து போச்சு. ரூம் மாற்றின விஷயம் எனக்குத் தெரியாதுன்னு சொல்லி சமாளிச்சேன். என்றார்.