டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி-2 படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு சினிமாக்களில் சரித்திர படங்கள் அதிகமாக உருவாகத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்போது பாகுமதி, சங்கமித்ரா படங்கள் உருவாகி வரும் நிலையில், அடுத்து மகாபாரதம், ராமாயணம் என பல பிரமாண்ட சரித்திர படங்கள் 1000 கோடி, 500 கோடி பட்ஜெட்டுகளில் தயாராகின்றன.
இந்த நிலையில், பேய் கதைகளாக நடித்து வந்த காஞ்சனா புகழ் ராகவா லாரன்சும் தற்போது ஒரு சரித்திர படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கான கதையையும் ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். 18-19ஆம் நூற்றாண்டுகளில் நடக்கும் கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.
மேலும், இந்த படத்தில் நடிக்க லாரன்ஸ் வட்டார நடிகைகள் சிலர் முயற்சி எடுத்து வந்த நிலையில், இதற்கு முன்பு தன்னுடன் நடித்த அத்தனை நடி கைகளையும் ஓரங்கட்டி விட்டு இந்த படத்தின் நாயகியாக காஜல்அகர்வாலை ஓகே செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் லாரன்ஸ். இந்த படத்தில் காஜல்அகர்வாலுக்கு இளவரசி வேடம் என்றும் கூறப்படுகிறது.