ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த பிரபாஸ்-ராணா இருவருமே பல மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான நடிகர்களாகி விட்டனர். அதோடு, அவர்கள் நடிக்கும் புதிய படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிப்படங்களாக உருவாகி வருகின்றன. அதேபோல், அப்பட நாயகியான அனுஷ்கா தற்போது பாகுமதி படத்தில் நடித்து வருகிறார். சரித்திர கதையில் தயாராகியுள்ள இந்த படம் அனுஷ்காவிக்கு இன்னொரு அருந்ததியாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில், பாகுபலி-2 படம் வெளியான நேரத்தில் பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் பின்னர் அப்படியொரு செய்தியை பரப்பிவிட்ட தனது உதவியாளரை வேலையை விட்டே நீக்கினார் அனுஷ்கா. அதேசமயம் அந்த செய்திக்கு அவர் நேரடியாக மீடியாக்களுக்கு எந்த மறுப்பு செய்தியும் கொடுக்கவில்லை.
இதற்கிடையே அனுஷ்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகுபலி நடிகர்களான பிரபாஸ்-ராணா இருவரில் உங்களை கவர்ந்த ஆணழகன் நடிகர் யார்? என்று கேட்கப்பட்டபோது, பிரபாஸ் என்று பதிலளித்துள்ளார். ராணா பற்றி கூறுகையில், ராணா எனது அண்ணன் போன்றவர். சினிமாவில் நடிக்கும்போது தவிர மற்ற நேரங்களில் என்னை தங்கை என்றுதான் அன்போடு அழைப்பார் என்று கூறியுள்ளார் அனுஷ்கா.