'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ராஷி கண்ணா அதன் பிறகு தெலுங்கில் பிசியான நடிகை ஆனார். தற்போது இரண்டு தமிழ் படங்கள் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். சித்தார்த்துடன் சைத்தான் கி பச்சா, அதர்வா, நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: "தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாளாக இருந்தது. என் ஆசையை ஒருமுறை சித்தார்த்திடம் கூறியிருந்தேன். அதை மனதில் வைத்து தற்போது சைத்தான் கி பச்சா படத்தின் மூலம் என்னை தமிழில் அறிமுகப்படுத்துகிறார். இந்த படம் வெளிவரும் முன்பே இமைக்கா நொடிகள் படத்திலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சைத்தான் கி பட்சா படத்தில் ரொம்ப ஜாலியான ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். இமைக்கா நொடிகளில் அதற்கு நேர் எதிரான கேரக்டர். ஆனால் இரண்டிலுமே நடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிற கேரக்டர்.
இரண்டு தமிழ் படங்கள் மூலம் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது. வில்லன் என்ற மலையாளப்படத்திலும் அறிமுகமாகிறேன். இதற்காக மலையாளம் கற்றுக் கொண்டேன். மலையாளம் கற்றுக் கொண்டதால் தமிழ் எளிதில் கற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். தமிழும் கற்பேன்" என்கிறார் ராஷி கண்ணா.