இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
89 படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகில் சுமார் 30 ஆண்டு காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது சூப்பர் குட் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஜீவா, 2003ம் ஆண்டு வெளிவந்த 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த 14 வருடங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில வெற்றிப் படங்களில் மட்டுமே ஜீவா நடித்துள்ளார்.
“ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன்' ஆகிய படங்கள் மட்டுமே ஜீவாவின் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. 14 வருடங்களில் அவர் அதிகப் படங்களிலும் நடிக்கவில்லை. மிகவும் தேர்ந்தெடுத்தே நடிக்கிறார். இருந்தாலும் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த “யான், போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம்” ஆகிய நான்கு படங்களும் தொடர் தோல்விப் படங்களாக அமைந்தது.
மீண்டும் நல்லதொரு வெற்றிக்காகக் காத்திருக்கும் ஜீவா நாயகனாக நடித்துள்ள 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படம் நாளை மறுநாள் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படமாவது ஜீவாவிற்கு வெற்றிக் கதகவைத் தொறக்கட்டும்.