மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பேசப்படும் நடிகராகிவிட்டார் பிரபாஸ். இந்த ஒரு படத்தின் வெற்றி, அவரை இந்திய அளவில் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் நடிக்க கேட்டு வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, தற்போது பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படத்தை சுஜித் ரெட்டி இயக்குகிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் சாஹோ படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லை. பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் நடிக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பூஜா ஹெட்டே, பிரபாஸ் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே, தமிழில் ஜீவாவுடன் முகமூடி என்ற படத்திலும், பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷனுடன் மொகஞ்சதரோ என்ற படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே தோல்வி படமாக அமைந்ததால் ராசியில்லா நடிகை என முத்திரை குத்தப்பட்டார். இருந்தாலும் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் உடன் டிஜே என்ற படத்தில் நடித்து வருகிறார். சாஹோ படம் நான்கு மொழிகளில் ரிலீஸாக இருப்பதால் நான்கு மொழிக்கும் தெரிந்த முகமாக இருக்க வேண்டும் என்று இவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பூஜா நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஐந்தாண்டுகளாக பாகுபலி படத்திற்கு கடுமையாக உழைத்ததால் தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார் பிரபாஸ். அவர் இந்தியா திரும்பியதும் ஹீரோயின் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.