ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாக்சிங்'கை மையமாக வைத்து 'இறுதிசுற்று' படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த இவர், முதலில் இயக்கிய படம் துரோகி. ஸ்ரீகாந்த், விஷ்ணுவை வைத்து சுதா இயக்கிய இந்தப்படம் படு தோல்வியடைந்தது. அதனால் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டவருக்கு சுமார் 5 வருடங்களுக்குக் கிடைத்த வாய்ப்புதான் இறுதிச்சுற்று.
அப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது சில நிஜ சம்பவங்களின் பின்னணியில் த்ரில்லர் கதை ஒன்றை தயார் செய்துள்ளாராம் சுதா. சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்த சுதா கொங்கரா அவரிடம் இந்த கதையைச் சொல்ல, சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். அதோடு தன்னுடைய சொந்த பேனரிலேயே அந்தப் படத்தை தயாரிப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார்.
தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இந்த படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் படத்தில் நடிக்க உள்ளார். வேலைக்காரன் படம் ரிலீஸ் நேரத்தில் சுதா கொங்கரா படத்தில் நடிப்பது பற்றி அறிவிப்பதாக திட்டமிட்டுள்ளனர்.