இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த ஏப்-28ல் வெளியான 'பாகுபலி-2'வுக்கு ரசிகர்களிடம் கிடைத்த அற்புதமான வரவேற்பால் தனது சொந்த ஊரில் மட்டுமல்லாமல் பக்கத்துக்கு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அந்தவகையில் கேரளாவில் மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' பட வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது 'பாகுபலி-2'.. மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் கேரளாவில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாகத்தான் இருக்கின்றன..
த்ரிஷ்யம் பட வசூல் சாதனையை (சுமார் 44 கோடி ) அடுத்து மோகன்லாலின் 'புலி முருகன் (சுமார் 9௦ கோடி) தான் முறியடித்தது. தற்போது 'பாகுபலி-2'வும் இந்த இரண்டு வார காலத்திற்குள்ளாகவே 'த்ரிஷ்யம்' சாதனையை மட்டுமல்லாமல் மோகன்லாலின் இன்னொரு படமான 'ஒப்பம்' பட வசூல் சாதனையையும் சேர்த்து (43 கோடி) ஓவர்டேக் செய்துள்ளது. இனிவரும் வார இறுதிக்குள் கேரளாவின் 'பாகுபலி-2' மொத்த வசூல் நிலவரம் சுமார் 5௦ கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.