இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அதன்பிறகு தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கூறிவந்தார். ஆனால், வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, வேலையில்லா பட்டதாரி-2 படங்களில் நடித்து வந்த தனுஷ், ப.பாண்டி படத்தையும் இயக்கியதால், கார்த்திக் சுப்புராஜ் படம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.
அதனால் தற்போது பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை தொடங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். தேவி படத்திற்கு பிறகு யங் மங் சங், கொலையுதிர்காலம் இந்தி ஆகிய படங்களில் நடிக்கும் பிரபுதேவா, விஷால்-கார்த்தி இணைந்து நடிக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தையும் இயக்குகிறார். இந்தநிலையில், கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் நடிக்கிறாராம்.
இந்தநேரத்தில் தனுஷ் நடிக்கயிருந்த படத்தில்தான் பிரபுதேவா நடிக்கிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் தனுஷ் நடிக்கும் படத்தை அக்டோபர் மாதம் இயக்க திட்டமிட்டிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் தரப்பில் கூறுகிறார்கள்.