இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனது டுவிட்டரில் பிரபலங்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால்வர்மா. சமீபத்தில் இயக்குனர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப் பட்டபோது, தாதா சாகேப் பால்கே விருதை கே.விஸ்வநாத்துக்கு வழங்கியதைவிட, கே.விஸ்வநாத் விருதை தாதா சாகேப் பால்கேவுக்கு வழங்கியிருக்கலாம் என்று ஒரு கருத்தினை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புகளும் எழுந்தது.
அதையடுத்து, ராஜமவுலியின் பாகுபலி-2 படம் வெளியானபோது அந்த படத்தை பாராட்டியிருந்தார். ஆனால், தற்போது பாகுபலி பட நாயகன் பிரபாஸை அவர் வழக்கம்போல் தனது பாணியில் கலாய்த்துள்ளார். அதாவது, பாகுபலி படத்தில் சிவகாமி வேடத்தில் ஸ்ரீதேவி மட்டும் நடித்திருந்தால் சிறப்பாக நடித்து பிரபாஸை ஓரங்கட்டியிருப்பார் என்று கூறியுள்ளார் ராம்கோபால்வர்மா.
இந்த படத்தில் சிவகாமி வேடத்திற்கு முதலில் ஸ்ரீதேவியிடம்தான் பேசினார் ராஜமவுலி. பின்னர் என்ன காரணமோ அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.