இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம்தான் என்னை அறிமுகம் செய்தார். அதன்பிறகு மிரட்டல், ராஜா ராணி ஆகிய படங்களில் அவருடன் நடித்தேன். அதையடுத்து சந்தானம் என்னை கைவிட்டு விட்டார் என்கிறார் ஜாங்கிரி மதுமிதா.
அவர் மேலும் கூறும்போது, சந்தானத்துடன் நான் நடித்து ஒரு கல் ஒரு கண்ணாடி படம் எனக்கு நல்லதொரு என்ட்ரியாக அமைந்தது. சந்தானத்துடன் நடித்ததினால்தான் அந்த அளவுக்கு பெயர் கிடைத்தது. என்றாலும் இப்போது ஹீரோவான பிறகு அவருக்கும், எனக்குமிடையே எந்த தொடர்பும் இல்லை.அவரது மொபைல் நம்பர்கூட எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு எங்களுக்கிடையே நட்பு இல்லாமல் போய் விட்டது.
ஆனால், இப்படி சந்தானம் என்னை கைவிட்டபோதும் சூரி எனக்கு கைகொடுத்து வருகிறார். ஜில்லா, வெள்ளைக்காரதுரை படங்களில் சூரியுடன் நடித்தேன். இப்போது சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளேன். காமெடி படம் என்பதால் எனக்கு ஸ்கோர் பண்ண நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் இந்த படத்தில் சூரியுடனான எனது கூட்டணி ரசிகர்களிடம் நல் ல ஆதரவை பெறும். அதோடு, காமெடி காட்சிகளில் தான் மட்டுமே ஸ்கோர் பண்ண வேண்டும் என்று நினைக்காமல் எனக்கும் ஸ்கோர் பண்ண இடைவெளி கொடுத்தார் சூரி. அதனால் முடிந்தவரை சிறப்பாக நடித் துள்ளேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு சூரிக்கு ஜோடியாக நடிக்க எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார் ஜாங்கிரி மதுமிதா.