மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் துணிகரம். பாலசுதன் இயக்கி உள்ளா£ர். ஷான் கோகுல், தனுஜ்மேனன் இசை அமைத்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு கஸ்தூரிராஜா பேசியதாவது:
துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக மற்றவர்கள் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன்.. இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது.
இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது.. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை. அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், 'அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க'ன்னு விமர்சனம் பண்ணார். அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்திருக்கிறேன். எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார். அதனால் இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது.
இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம் தான். சின்னப்படம் வந்தாலும் மூணு நாள் தான். சூப்பர்ஸ்டார் படமும் மூணு நாள். இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள் தான்.. அதனால இனி நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு, என்றார் கஸ்தூரி ராஜா.