‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர் பாலு. இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பாலியல் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகியுள்ள இந்த படமும் பாகுபலி போன்று பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது என்கிறார் இயக்குனர்.
கர்ஜனை படம் குறித்து சுந்தர் பாலு கூறுகையில், நாட்டில் பரவலாக நடந்து வரும் பாலியல் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு இந்த கர்ஜனை படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் திரிஷாவுக்கும் வில்லனுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் பழிவாங்குவார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட கோபம் எப்படி பழிவாங்கும் உணர்ச்சியாக மாறுகிறது என்பதுதான் கர்ஜனை.
ஒரு அரை மணி நேரம் அமைதியாக செல்லும் படம் பின்னர் சூடு பிடிக்கும். குறிப்பாக, இடைவேளைக்குப்பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள்தான். கதையோட்டம் விறுவிறுப்பாக செல்லும். இந்த படத்தில் சில சண்டை காட்சிகளிலும் நடித்துள்ள திரிஷாவுக்கு முன்னதாகவே பயிற்சி கொடுத்தோம். அதனால் ஸ்பாட்டிக்கு வந்த பிறகு டேக் வாங்காமல் நடித்தார். அதேபோல் க்ளைமாக்சில் வில்லனை திரிஷா பழிவாங்கும் காட்சியில் ஒரு அதிரடியான எமோசனல் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆக, கர்ஜனையும் பாகுபலி போன்று பழிவாங்கும் கதைதான். பிரச்சினைகள்தான் வேறு என்கிறார் இயக்குனர் சுந்தர்பாலு.