ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் அடுத்து இயக்கி வரும் படம் தீரன் அத்யாயம் ஒன்று. கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கார்த்தியின் கேரக்டர் பெயர் தீரன். துப்பறிவதில் கில்லாடியான போலீஸ் டி.எஸ்.பி தீரன் கைக்கு ஒரு முக்கியமான கேஸ் வருகிறது. அதன் பின்னால் செல்லும் தீரன், இந்தியா முழுக்க பயணிக்க வேண்டியது இருக்கிறது. ஒரு சம்பவத்தின் பின்னால் எத்தனை மனிதர்கள், எத்தனை இடங்கள், தொடர்பு இருக்கிறது என்பதை ஆச்சர்யத்துடனும், திடுக்கிடும் சம்பவங்களுடனும் விளக்கப்போகிறது படம். பெரும்பகுதி கதை வட இந்தியாவில் நடக்கிறது. கொழுத்தும் வடநாட்டு வெயிலில் தொடர்ந்து 42 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார்கள். காற்று வெளியிடை படத்துக்காக குளிர் நடுங்கிய கார்த்தி, தீரன் அதிகாரம் ஒன்றுக்காக வெயிலில் காய்ந்திருக்கிறார்.