600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
டயமிங் காமெடியை வைத்து பிரபலமானவர் சந்தானம். அந்தவகையில், அவர் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும் அவரது பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தபோதும் அவர்களுடன் நடிக்கும் காட்சிகளில் அவர்களை விடவும் தானே அதிகமாக டயலாக் பேசி நடிப்பார் சந்தானம். ஆனால் இப்படி தனது வாயையே ஆயுதமாக கொண்டு செயல்பட்டு வரும் சந்தானம், தான் ஹீரோவாக நடித்த படங்களிலும் அதைத் தொடர்ந்து வருகிறார்.
ஆனால், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தில் சந்தானத்தை அவரது பாணியில் நடிக்கவே விடவில்லையாம் அவர். எனது படங்களில் பேச்சைக்குறைத்து பர்பாமென்ஸை அதிகமாக பண்ணுவது தான் ஹீரோக்களின் பாணி. அதைத்தான் நீங்களும் செய்ய வேண்டும் என்று சந்தானத்துக்கு வாய் நிறைய பேசுவதற்கு அவர் அனுமதியே கொடுக்கவில்லையாம். தேவைப்படும்போது மட்டும்தான் நீங்கள் வாயே திறக்க வேண்டும் என்று சொல்லி சந்தானத்துக்கு வாய்ப்பூட்டு போட்டு விட்டாராம் செல்வராகவன். இதனால், மன்னவன் வந்தானடி படத்தில் மாறுபட்ட ஹீரோவாகியிருக்கிறார் சந்தானம்.
ஆனால் இதை நினைத்து சந்தானமும் பீல் பண்ணவில்லை. நடப்பது எல்லாம் நல்லதுக்குத்தான் என்கிறார். காரணம், இதன்பிறகு கெளதம்மேனன் படத்தில் நடிக்கிறேன். அவர் பேசவே விட மாட்டார். அதனால் இந்த படத்தில் இருந்தே அவர் படத்தில் நடிப்பதற்கான பயிற்சியை தொடங்குகிறேன் என்று கூறுகிறாராம் சந்தானம்.