ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஓவியர், நடிகர், தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர் சென்னையை அடுத்து விஜிபி கடற்கரை பூங்காவில் சிலிகான் சிலை மியூசியம் அமைத்துள்ளார். இதில் உலக தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்களின் சிலிகான் சிலைகள் வடிவமைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கு வரைந்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அங்குள்ள சிலிகான் சிலைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்னை தெரசா சிலையை தொட்டு பார்த்தபோது மனம் நெகிழ்ந்தார். பின்னர் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், 'ஸ்ரீதர் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் அவர் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய ஐடியாஸ் அவரிடம் இருக்கு. எல்லாமே சூப்பராக இருக்கும். இந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். என்றார் கீர்த்தி சுரேஷ்.