அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்து வரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் பாராட்டி மகிழ்கிறார்கள். ஆனால் சக இயக்குநர்களால் எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்துள்ள வெற்றியை சகித்துக்கொள்ள முடியவில்லை. மற்ற இயக்குநர்களை நக்கலடிப்பதையே வேலையாக வைத்துள்ள ராம்கோபால்வர்மா பாகுபலி- 2 படம் பற்றி நக்கலடித்தார்.
அவரைப்போலவே, பாகுபலி 2 படத்துக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தங்கர் பச்சானும் தன்னுடைய கடுப்பை பதிவு செய்துள்ளார்.
"மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம், என்றைக்கு உருவாகுமோ அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று 'பாகுபலி 2' படத்தின் வெற்றி பற்றி தங்கர் பச்சான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகுபலி 2 படம் இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.