இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என, பின்னணி பாடகி, சுசித்ரா வேதனை தெரிவித்துள்ளார். தனுஷ், த்ரிஷா உள்ளிட்ட தமிழ் திரை நட்சத்திரங்களின் ரகசிய படங்களை, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர், சினிமா பின்னணி பாடகி சுசித்ரா. இதற்கு, அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதே காரணமாக கூறப்பட்டது. பின், அவரது டுவிட்டர் பக்கம், முற்றிலுமாக நீக்கப்பட்டது.
இந்நிலையில், சுசித்ரா கூறியதாவது: இரண்டு மாதமாக, அனைவரையும் சிரமத்துக்கு ஆளாக்கிய வேதனையில், இருக்கிறேன்; நடந்ததை எண்ணி வருத்தப்படுகிறேன். என் பெயரில் வெளியான படம் மற்றும் தகவல்களுக்கு, நான் பொறுப்பல்ல. என்றாலும், என்னால் ஆறுதல் பெற முடியவில்லை. அந்த படங்களை நான் வெளியிடவில்லை; யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
என் மனநிலை குறித்து, என் கணவர் கூறியதை சரி செய்து வருகிறேன். இப்போது உடல் நலம் பரவாயில்லை. என்னால் பாதித்தவர்களிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை; யார் நட்பையும் இழக்க விரும்பவில்லை. இந்த நிலை, என் எதிரிக்கு கூட வரக்கூடாது. மனநல பாதிப்பில் இருந்து, மீண்டு வர ஆறு வாரங்களானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.