ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாகுபலி ஜூரம் இந்தியா முழுக்க தொற்றிக் கொண்டுள்ளது. படம் நாளை வெளியாக இருப்பதால் படத்திற்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். சென்னையில் பாகுபலி-2 திரையிடப்பட உள்ள அனைத்து மால் தியேட்டர்களிலும் டிக்கெட் புல்லாகி விட்டன. தமிழகத்தை விட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் பாகுபலிக்கான ஜூரம் அதிகம் காணப்படுகின்றன.
அதிலும் ஐதராபாத்தின், நெக்லெஸ் சாலையில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை 7 மணி முதலே ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர். அப்படி நின்ற வரிசை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு நீண்டது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு டிக்கெட் முன்பதிவுகள் நடந்தன.
பாகுபலி மீது எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே சாட்சி...!