டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெய்வீகக் குரலோன் கே.ஜே.யேசுதாஸ் மகன், விஜய் யேசுதாஸ், மாரி படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்; இதைத் தொடர்ந்து, மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கத்தில், படைவீரன் படத்தில் பாரதிராஜாவுடன் நடித்து வரும் விஜய், அந்த படம் பற்றியும், தன்னைப் பற்றியும் மனம் விட்டு பேசுகிறார்.
படைவீரன் டைட்டில் மிரட்டலா இருக்கே?
சொந்தங்கள் இடையேயான உறவையும், உணர்வையும் சேர்த்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தேனிக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஒரு தலைவன், அவனுக்கு அருகில் இருக்கும் நபர்கள், இதைச் சுற்றி நடப்பது தான், இந்த படத்தின் கதை. படத்தில் என் கேரக்டர் பேர் முனி.
அமெரிக்காவில் படித்த நீங்க, இந்த கிராமத்து ரோலுக்கு தேர்வானது எப்படி?
எனக்கே அது சவாலாகத் தான் இருந்தது. இயக்குனர் கதை சொல்லும் போது, என்னை இந்த கேரக்டருக்கு எப்படி தேர்வு செய்தார் என, ஆச்சரியமாக இருந்தது. ஆனால், லுங்கி, சாதாரண சட்டை என, அப்படியே என்னை முனியாக மாற்றி விட்டார். முடிந்தவரை, மலையாள வாசனை இல்லாமல் பேசியிருக்கிறேன்.
பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்?
மாரி படத்தில் தனுஷ் கூட நடிக்கும்போது, கொஞ்சம் டென்ஷன் இருந்தது. அவர் நண்பர் என்பதால், கொஞ்சம் 'அட்ஜெஸ்ட்' செய்தார். படைவீரன் சூட்டிங் துவங்கிய போது, ரொம்பவே டென்ஷனாக இருந்தது. பாரதிராஜா, ரொம்ப இயற்கையாக நடிப்பார். இயல்பாக வசனம் பேசுவார். எனக்கு நிறைய முக பாவனைகள் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
இசை, நடிப்பு, இதில் எது சுலபம்?
இரண்டுமே சுலபம் இல்லை. ஒரு பாட்டு 'ரெகார்ட்' பண்ணி முடிக்க, ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். நடிப்பும் அப்படித் தான். என்னை பொறுத்தவரை எதுவுமே சுலபம் இல்லை. முறையாக பயிற்சி எடுத்துச் செய்தால், சுலபமாக இருக்கும்.
ஒரு நடிகராக, உடல் ரீதியாக, எப்படி உங்களை தயார் செய்தீர்கள்?
படத்துக்காக எடையை குறைக்க வேண்டியிருந்தது. கிராமத்து இளைஞர்வேடத்துக்கு பொருத்தமாக என் தோற்றத்தை மாற்றினேன்.
நீங்கள் நடிப்பதை, அப்பா விரும்புகிறாரா?
அப்பாவுக்கு, நான், தொடர்ந்து பாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. டப்பிங் வேலை நடக்கும் போது, என் மகள் அமையாவை கூட்டிச் சென்றேன். திரையில் என்னைப் பார்த்து விட்டு, 'அப்பா, ஏன் அழுக்கா இருக்கீங்க' என, கேட்டாள். என் மனைவி, எனக்கு நல்ல தோழி; இப்போதும், எனக்கு ரொம்ப ஆதரவாக இருக்காங்க. அப்பா, அம்மா, என் மகள், இந்த மூன்று பேரும், நான் நடிப்பதை விரும்பவில்லை.
எதிர்கால ஆசை?
நிறைய பாடணும். நல்ல படங்கள் வந்தால் நடிக்க வேண்டும். ஆனால், என்ன நடக்க வேண்டுமோ, அது தான் நடக்கும். என் தந்தை, பிரபலமான பாடகர் என்பதால், இசையமைப்பாளர்களிடம் தானாக சென்று, வாய்ப்பு கேட்க, மனது வரவில்லை. வாழ்க்கை எப்படி போகுதோ, அப்படி போகட்டும். நான், சினிமாவின் காதலன். படங்களில் நடிக்க, எனக்கு பிடிக்கும்.
எந்த ஹீரோயினுடன் ஜோடி சேர ஆசை?
த்ரிஷாவும், நயன்தாராவும் எனக்கு மிகவும் பிடித்த நடிகையர். ஐஸ்வர்யா ராய் நடிப்பும் ரொம்ப பிடிக்கும். அவங்களை பிடிக்கும் என கூறியதற்கே, உங்கள் முக பாவம் மாறியது; அவங்களுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றால், என்னை எப்படி பார்ப்பீங்கன்னு தெரியும். எனக்கு, த்ரிஷா போதுங்க.
எஸ்.பி.பி., - இளையராஜா பிரச்னை பற்றி உங்க கருத்து?
நாங்கள், ஒரு குடும்பமாக இருக்கிறோம். தவறான கருத்துக்களால், செய்தி தவறாக சித்தரிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். இரண்டு பேரின் தனிப்பட்ட உணர்வை, நாம் விமர்சிக்க கூடாது. இசை கச்சேரிகளில், குறிப்பிட்ட பாடல்களை பாடாமல் இருக்க முடியாது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள், அந்த பாடலுக்கு உரிமை கோருபவர்களிடம், கட்டணம் செலுத்தலாம். இந்த விஷயத்தை முறைப்படுத்த வேண்டும்.