‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1930-ம் ஆண்டு, பிப்., 19-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் காசிநாதுனி விஸ்வநாத் எனும் கே.விஸ்வநாத். சினிமாவில் சவுண்ட் டிசைனராக அறிமுகமாகி, இயக்குநர், நடிகர் என் பன்முகம் காட்டியவர். இவர் இயக்கிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து... என 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தி, தமிழ் மொழிகளிலும் பிரபலமான இயக்குநராக திகழ்ந்தார்.
இயக்குநராக மட்டுமல்லாது குருதிப்புனல், முகவரி, காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, உத்தம வில்லன், லிங்கா... என நிறைய தமிழ் படங்களில் நடிகராகவும் அசத்தியுள்ளார். ஏற்கனவே பத்மஸ்ரீ விருது, 5 முறை தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள கே.விஸ்வநாத்திற்கு இப்போது மற்றொரு மகுடமாக இந்தாண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் சினிமா துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.