ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம். இந்தப் படத்தை எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்துவிட்டார் கமல்.
விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு கணிசமான விலைக்கும் விற்றுவிட்டார். ஆனால் மீதியுள்ள காட்சிகளை எடுக்க மேற்கொண்டு கமல் பணம் கேட்டதால், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தர மறுத்தார். இதைத் தொடர்ந்து படம் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பிறகு கமல் நடித்த மூன்று படங்கள் வெளியாகி, நான்காவது படமான சபாஷ் நாயுடு தொடங்கப்பட்டு, கமல் விபத்தில் சிக்கியதால் பாதியில் நிற்கிறது. சபாஷ் நாயுடு படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளதால், இப்போது விஸ்வரூபம்-2 படத்தை தாமே வெளியிட கமல் முயற்சி மேற்கொண்டார். தனது ராஜ்கமல் புரோடெக்ஷன்ஸ் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் உரிமத்தை பெற்றுள்ளதாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பணிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. டப்பிங் மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது துரிதமாக நடப்பதாகவும் 2017 இறுதிக்கும் படம் வெளியாகிவிடும் என்றும் கமல் டுவிட்டரில் உறுதியாக அறிவித்துள்ளார். மேலும், அரசியல் தடைகள் தான் விடாமுயற்சியுடன் தாண்டி வந்ததற்கு தனக்கு மட்டுமின்றி இந்த நாட்டிற்கும் பலன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.